பாகிஸ்தானில் குண்டு வெடிப்பு..5 பாதுகாப்பு படை வீரர்கள் பலி.!
Bomb blast kills 5 security personnel in Pakistan
பாகிஸ்தானின் தென்மேற்கில் பலுசிஸ்தான் மாகாணத்திலுள்ள சிபி மாவட்டத்தில் இன்று அதிகாலை நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதலில் 5 பாதுகாப்பு படை வீரர்கள் பலியாகினர்.
மேலும், இந்த வெடிகுண்டு தாக்குதலில் 30 பேர் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் 5 பேரின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த தாக்குதலுக்கு ஐஎஸ் அமைப்பினர் பொறுப்பேற்றுள்ளனர். குண்டுவெடிப்பு நடந்த பலுசிஸ்தானில் நடைபெற்ற கலாச்சார விழாவில் பாகிஸ்தான் அதிபர் ஆரிப் ஆல்வி பங்கேற்க சென்ற நிலையில், வெடிகுண்டு தாக்குதல் நடந்துள்ளது பாகிஸ்தானில் பரபரப்பு ஏற்பட்டுத்தியது.
English Summary
Bomb blast kills 5 security personnel in Pakistan