இரவில் குலுங்கிய அந்தமான் நிகோபார் தீவுகள்: 4.7 ரிக்டர் பதிவு! - Seithipunal
Seithipunal


அந்தமான் நிக்கோபார் தீவுகளில் 4.7 ரிக்டர் அளவு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 

நேற்றிரவு 8.15 மணியளவில் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.7 அலகுகளாக பதிவாகியுள்ளது.

இந்த நிலநடுக்கம் பூமிக்கு அடியில் சுமார் 80 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாகவும் தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 

இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் பொருட் சேதம் குறித்து இதுவரை எந்த ஒரு தகவல் வெளியாகவில்லை. 

இதற்கு முன்னதாக கடந்த அக்டோபர் 20ஆம் தேதி இதே போல் அந்தமானில் 4.2 ரிக்டர் அளவில நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Andaman and Nicobar Islands earthquake 


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->