வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானுக்கு 30 மில்லியன் டாலர் நிதி உதவி வழங்குவதாக அமெரிக்கா அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானுக்கு 30 மில்லியன் டாலர் நிதி உதவி வழங்குவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

பருவநிலை காரணமாக கடந்த ஐந்து வாரங்களாக பாகிஸ்தானில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் சிந்து, கிழக்கு பஞ்சாப், பலுசிஸ்தான், சுக்கூர், சிந்தி உள்ளிட்ட மாகணங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெரிதும் பாதிப்படைந்துள்ளன.

வெள்ளப்பெருக்கால் இதுவரை சிறுவர்கள் உட்பட 1100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்நிலையில் பாகிஸ்தானுக்கு வெள்ள நிவாரணம், உணவு, பாதுகாப்பான நீர் மற்றும் தங்குமிடம் போன்ற முக்கியமான மனிதாபிமான உதவிகளுக்காக 30 மில்லியன் டாலர்களை அமெரிக்கா வழங்குவதாக அறிவித்துள்ளது.

மேலும் இக்கட்டான சூழ்நிலையில் பாகிஸ்தானுடன் உறுதுணையாக இருப்போம் என அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் டோனி பிளிங்கன் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

America allocates 30 million dollor to Pakistan for flood relief


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->