'ஏஐ' மூலம் உருவாக்கப்பட்ட ஆபாச படங்கள் மூலம் அவமானம்; பிரபல ஹாலிவுட் நடிகை நாடாளுமன்றத்தில் வேதனை..! - Seithipunal
Seithipunal


செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்படும் போலி ஆபாச படங்களுக்கு எதிராக பிரபல ஹாலிவுட் நடிகை பாரிஸ் ஹில்டன் அமெரிக்க நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்து பேசியுள்ளார். 

கடந்த 2004-ஆம் ஆண்டு தனது 19-வது வயதில் பாரிஸ் ஹில்டன், காதலருடன் இருந்த அந்தரங்க வீடியோ இணையத்தில் வெளியானதால் பெரும் அதிர்ச்சியடைந்தார். அந்தச் சமயத்தில் இணையதளம் புதிதாக இருந்ததால், தன்னை எல்லோரும் கேலி செய்ததாகவும், அது ஒரு ஊழல் என்று கூறினார்களே தவிர, அது தனக்கு நேர்ந்த கொடுமை என்பதை யாரும் உணரவில்லை என்றும் அவர் மிகவும் உருக்கமாக தெரிவித்துள்ளார்.

அந்தச் சம்பவத்தால் தனது உடல் மற்றும் தனது நற்பெயரின் மீதான கட்டுப்பாட்டை இழந்து, மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானதாகவும், பாரிஸ் ஹில்டன் வேதனையை பகிர்ந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில், செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மூலம் உருவாக்கப்படும் போலி ஆபாச படங்களுக்கு எதிரான சட்டத்தை ஆதரித்து பாரிஸ் ஹில்டன் பேசியுள்ளார்.

அப்போது அவர் கூறியதாவது: எனது அனுமதியின்றி ஏஐ தொழில்நுட்பம் மூலம் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட எனது போலி ஆபாச படங்கள் உருவாக்கப்பட்டுள்ளன; இது உண்மையானது இல்லை என்றாலும், யாரோ ஒருவர் இதைப் பார்க்கிறார்கள் என்ற எண்ணமே எனக்குப் பயத்தை அளிக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

இதன் மூலம், 08 பெண்களில் ஒருவர் பாதிக்கப்படுகிறார்கள் என்றும்,  எனது இரண்டரை வயது மகளைப் பாதுகாப்பதற்காகவும், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி கிடைக்கவும் இந்தச் சட்டம் அவசியமானது என்று அவர் மேலும், வலியுறுத்தியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

A famous Hollywood actress expresses distress after being humiliated by obscene images created through AI


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?




Seithipunal
--> -->