ஒரே வருடத்தில் 70000 நபரின் உயிரை பறித்த போதை மருந்து.!
70000 peoples died in america for drugs
கடந்த ஒரே வருடத்தில் அமெரிக்கா நாட்டில் உள்ள ஃபெண்டான் பகுதியில் போதை மருந்து காரணமாக 70,000 நபர்கள் மரணமடைந்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக சீனா நடவடிக்கை எடுக்க ஒப்புக்கொண்டுள்ளது.
தற்போது ஜோ பைடன் மற்றும் சீனாவின் ஜி ஜின்பிங் உள்ளிட்டோர் சான் பிரான்சிஸ்கோவில் ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு உச்சிமாநாட்டின் ஒருபகுதியாக சந்தித்துக் கொண்ட நிலையில் புதிய ஒப்பந்தம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஃபெண்டானில் விவகாரத்தில் சீனா உறுதியான நடவடிக்கை முன்னெடுக்கும் என்றால், போதைப்பொருட்களுக்கு எதிரான போரில் பைடன் நிர்வாகம் வெற்றி பெற்றுள்ளதாக கூறி தேர்தலை சந்திக்கலாம் என்று கூறப்படுகிறது.
மெக்ஸிகோ மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகள் ஃபெண்டானில் மற்றும் ஃபெண்டானில் தொடர்பான பொருட்களை நேரடியாக அமெரிக்காவிற்கு கடத்துவதாக கண்டறியப்பட்டுள்ளது. கடந்த 2018ல் சீன அரசாங்கம் ஃபெண்டானில் ஏற்றுமதிக்கு எதிராக தொடர் நடவடிக்கைகளை அறிவித்தது.
English Summary
70000 peoples died in america for drugs