உக்ரைனில் இருந்து லெபனானுக்கு செல்லும் மேலும் 4 தானிய கப்பல்.! - Seithipunal
Seithipunal


உலகின் மிகப்பெரிய தானியங்கள் ஏற்றுமதியாளராக இருந்துவரும் உக்ரைன், ரஷ்யாவின் தாக்குதலால் ஏற்றுமதி முற்றிலும் தடைபட்டிருந்தது. இதனால் சர்வதேச அளவில் உணவு நெருக்கடி ஏற்பட்டு உலகில் 4.7 கோடி பேர் பசியால் வாடும் அபாயம் ஏற்பட்டது.

இந்நிலையில் ஐநா மேற்கொண்ட முயற்சிகளின் பலனாக உக்ரைனிலிருந்து கருங்கடல் வழியாக தானிய ஏற்றுமதிக்கான ஒப்பந்தம் உக்ரைன், துருக்கி மற்றும் ரஷ்யா இடையே கடந்த மாதம் கையெழுத்தானது.

இந்நிலையில் தானியம் ஏற்றப்பட்ட முதல் சரக்கு ரசோனி கப்பல் ஒடேசா துறைமுகத்தில் இருந்து லெபனானுக்கு சென்றது. இதையடுத்து மேலும் 4 கப்பல்கள் தானியங்களுடன் உக்ரைன் துறைமுகங்களில் இருந்து இன்று லெபனானுக்கு செல்கிறது.

இதனால் பசியால் வாடும் 4.7 கோடி பேரின் துயரை துடைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

4 grains ships goes to Lebanon from ukraine


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->