ஆஸ்திரேலியாவில் நடந்த பயங்கர துப்பாக்கி சூட்டில் 3 பேர் பலி
3 died in shooting in Australia
அமெரிக்காவில் தொடர்ந்து நிகழ்ந்த துப்பாக்கி சூடு சம்பவங்களால் உலகின் பல நாடுகளில் துப்பாக்கி கலாச்சாரத்திற்கு எதிராக பல சட்டங்கள் கொண்டுவரப்பட்டன.
இந்நிலையில் ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணம், போகியில் உள்ள கால்நடைகள் பண்ணை மீது நேற்று காலையில் அடையாளம் தெரியாத நபரால் பயங்கர துப்பாக்கிச்சூடு நடந்தது.
இந்த துப்பாக்கி சூட்டில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த வந்த போலீசார், குண்டு பாய்ந்து படுகாயமடைந்தவரை மீட்டு ஹெலிகாப்டர் மூலம் அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் உலகிலேயே ஆஸ்திரேலியாவில் கடுமையான துப்பாக்கிச்சட்டங்கள் இருந்தும், இந்த துப்பாக்கிச்சூட்டால் ஆஸ்திரேலியா அதிர்ந்து போய் இருக்கிறது.
இதையடுத்து துப்பாக்கிச்சூட்டை நடத்திய நபர் அங்கிருந்து தப்பி ஓடியதால், அவரை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
English Summary
3 died in shooting in Australia