தவெக ஆட்சிக்கு முதல் சவால்...! - நம்பிக்கை வாக்கெடுப்பின்போது திமுக அதிரடி வெளிநடப்பு...! - Seithipunal
Seithipunal


தவெக அரசின் மீது கொண்டுவரப்பட்ட நம்பிக்கை தீர்மானம் தொடர்பான விவாதத்தின் போது, தமிழக சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் உதயநிதி ஸ்டாலின் ஆவேசமான அரசியல் உரையால் ஆளுங்கட்சியை கடுமையாக சாடினார்.அவர் தெரிவித்ததாவது,"இந்த சட்டமன்றத் தேர்தலில் தமிழக மக்களின் முழுமையான ஆதரவை இந்த அரசு பெறவில்லை. பதிவான மொத்த 4.93 கோடி வாக்குகளில், ஆளுங்கட்சி பெற்றிருப்பது வெறும் 1.72 கோடி வாக்குகள் மட்டுமே. மீதமுள்ள 3.21 கோடி மக்கள் இந்த ஆட்சிக்கு எதிராகவே வாக்களித்துள்ளனர்.

அதாவது, 65 சதவீத மக்களால் நிராகரிக்கப்பட்ட ஆட்சி தற்போது அதிகாரத்தில் அமர்ந்துள்ளது.இந்த சூழலில், எங்களுக்கு மட்டுமல்ல, உங்களுக்கு வாக்களித்த மக்களிடம்கூட நாளுக்கு நாள் நம்பிக்கை சிதைந்து வருகிறது. மக்கள் எதிர்பார்த்த மாற்றம் இன்னும் உருவாகவில்லை என்பதே பொதுமக்களின் ஏமாற்றமாக மாறியுள்ளது” என்று அவர் குறிப்பிட்டார்.

மேலும், முதல்-அமைச்சர் விஜய் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டதையே அவர் சுட்டிக்காட்டி, “தன்னம்பிக்கை முழுமையாக இருந்திருந்தால் ஒரே தொகுதியில் போட்டியிட்டிருப்பார். இரண்டு இடங்களில் வெற்றி பெற்ற பிறகு, ஒரு தொகுதியை ராஜினாமா செய்தவர், அந்த மக்களிடம் இதுவரை நேரில் சென்று நன்றி கூட தெரிவிக்கவில்லை” என்று விமர்சித்தார்.

“இன்று உங்களுக்கு ஆதரவு அளித்து வரும் பல கட்சிகள், கடந்த காலத்தில் எங்கள் கூட்டணியில் இருந்தவர்கள் தான். குடியரசுத்தலைவர் ஆட்சி வரக்கூடாது என்ற அரசியல் அவசியம் காரணமாகவே அவர்கள் தற்போது உங்களுடன் நிற்கின்றனர்” என்றும் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.அதிமுக உள்பிரிவுகள் குறித்தும் அவர் கடுமையாக தாக்கி பேசியார். “அதிமுக பிளவுபட்ட சூழலில், ஒரு பிரிவு உங்களுக்கு ஆதரவு அளித்தது. அதன் பின்னர் நடந்த அரசியல் நகர்வுகள் மக்களிடையே கேள்விகளை எழுப்பியுள்ளன.

ஒரு பிரிவு தலைவரின் வீட்டுக்கு புதிய சோபா சென்றதோடு, பின்னாலேயே புதிய முதல்-அமைச்சரும் சென்றார் என்ற விமர்சனங்கள் மக்கள் மத்தியில் பரவி வருகின்றன. திரைப்பட காட்சிகளைப் போல அரசியல் அரங்கேறுகிறது என்ற எண்ணமே தற்போது உருவாகியுள்ளது” என்று அவர் தெரிவித்தார்.“ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான சக்திகளுடன் இணைந்திருக்கும் இந்த ஆட்சியை சமூக வலைதளங்களில் மக்கள் திறந்தவெளியாக விமர்சித்து வருகின்றனர்.

உங்களுக்கு ஆதரவு தெரிவித்த கூட்டணி கட்சிகளுக்குள்ளேயே அதிருப்தி நிலவி வருகிறது” என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.இதைத் தொடர்ந்து பேசிய அவர், “கடன் வாங்கி ஆட்சியை நடத்தும் நிலைக்கு தள்ளப்பட்ட அரசு, உண்மை பிரச்சினைகளில் இருந்து மக்களின் கவனத்தை திருப்ப பல்வேறு கருத்துக்களை முன்வைக்கிறது. உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கே தற்போது வருத்தம் ஏற்பட்டுள்ளது” என்று குற்றம்சாட்டினார்.

மேலும், “நாங்கள் ஆட்சியில் இருந்தபோது கொண்டு வந்த மக்கள் நலத் திட்டங்களை அரசியல் பழிவாங்கும் மனநிலையால் முடக்க வேண்டாம். திட்டங்களை ஆய்வு செய்ய நேரம் எடுத்துக் கொள்ளுங்கள்; ஆனால் மக்களின் வாழ்வை பாதிக்கும் அளவுக்கு தாமதப்படுத்தாதீர்கள். தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள்” என்றும் அவர் வலியுறுத்தினார்.

“இந்த மாதம் 15-ஆம் தேதி கிடைக்க வேண்டிய உரிமைத்தொகைக்காக ஆயிரக்கணக்கான பெண்கள் காத்திருக்கின்றனர். சமூக வலைதளக் காட்சிகளால் மட்டும் நிரம்பிய ஆட்சியாக இல்லாமல், உண்மையில் மக்கள் வாழ்வை தொட்டுச் செயல்படும் நிர்வாகமாக இந்த அரசு மாற வேண்டும். மக்கள் எதிர்பார்ப்பது விளம்பர அரசியலை அல்ல; செயல்படும் ஆட்சியைத் தான்” என்று அவர் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, நம்பிக்கை வாக்கெடுப்பு நடைமுறையில் இருந்து திராவிட முன்னேற்ற கழகம் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

first challenge Tvk regime DMK dramatic walkout during trust vote


கருத்துக் கணிப்பு

முதல்வர் பதவி ஏற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது..



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் பதவி ஏற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது..




Seithipunal
--> -->