பெருவில் கோர விபத்து - 13 பேர் உடல் கருகி பலி, 6 பேர் படுகாயம்.! - Seithipunal
Seithipunal


பெருவில் பேருந்தும், ஆட்டோவும் நேருக்கு நேர் மோதிய கோர விபத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் ஆறு பேர் படுகாயமடைந்துள்ளனர்.

பெரு நாட்டின் பியூராவின் வடக்குப் பகுதியில் இருந்து 50 பயணிகளுடன் பேருந்து ஒன்று லிமாவுக்கு சென்று கொண்டிருந்தது. அப்பொழுது லிமாவிற்கு வடக்கே சுமார் 370 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அன்காஷ் பகுதியில் பேருந்து சென்றபோது, அவ்வழியாக எதிரே வந்த ஆட்டோவுடன் பேருந்து நேருக்கு நேர் மோதி பேருந்தும், ஆட்டோவும் தீப்பிடித்து எரிந்துள்ளது.

இந்த பயங்கர விபத்தில் 13 பேர் பரிதாபமாக உடல் கருகி உயிரிழந்துள்ளனர். மேலும் 6 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இதையடுத்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் மற்றும் மீட்பு குழுவினர் பலத்த காயமடைந்த 6 பேரையும் மீட்டு காஸ்மாவில் உள்ள பிராந்திய மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் உடல்கள் அடையாளம் காண முடியாத அளவுக்கு எரிக்கப்பட்டு உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதைத்தொடர்ந்து, இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

13 killed 6 injured in road accident in peru


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->