இந்தோனேசியாவில் சோகம்: கல் குவாரியில் பாறை சரிந்து விபத்து; 13 பேர் பலி: 12 பேர் படுகாயம் படுகாயம்..! - Seithipunal
Seithipunal


இந்தோனேசியாவில் சுண்ணாம்பு கல் குவாரியில் பாறைகள் சரிந்து விழுந்து பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது. இடிபாடுகளில் சிக்கி 13 பேர் உயிரிழந்துள்ளதோடு,  மேலும் 12 பேர் பலத்த காயமடைந்துள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தோனேசியாவின் ஜாவா மாகாணத்தின் சிரேபன் நகரத்தில் சுண்ணாம்புக் கல் குவாரி ஒன்றில் இன்று மே (30), காலையில் தொழிலாளர்கள் வழக்கம் போல் பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். அப்போது திடீரென  பாறைகள் சரிந்துள்ளது. அப்போது, அங்கு பணியாற்றிய தொழிலாளர்கள் மற்றும் ஏராளமான இயந்திரங்கள் பாறைகளுக்குள் புதைந்துள்ளன. 

இதன் போது 13 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். ஐந்து பேர் மாயமாகியுள்ளனர். அவர்களைத் தேடும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறதோடு, பாலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

அத்துடன், 12 பேர் பலத்த படுகாயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சுரங்கம் சட்டப்படி உரிய அனுமதிகள் பெற்று இயங்கி வந்தாலும், அங்குப் போதுமான பாதுகாப்பு வசதிகள் இல்லை என மேற்கு ஜாவா ஆளுநர் டெடி முல்யாடி தெரிவித்துள்ளார்.

அத்துடன், அந்தச் சுரங்கம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள குழிகள் அனைத்தும் நிரந்தரமாக மூடப்படுவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2024-ஆம் ஆண்டு சுலாவெசி தீவில் ஏற்பட்ட நிலச்சரிவில் அங்கு சட்டவிரோதமாகச் செயல்பட்டு வந்த தங்கச் சுரங்கம் மண்ணுக்குள் புதைந்ததில்  23 பேர் உயிரிழந்தமை  குறிப்பிடத்தக்கது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

13 killed 12 seriously injured in rock collapse at stone quarry in Indonesia


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->