சென்னை உட்பட 6 மாவட்டங்களில் பரவலாக மழை! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் நிலவும் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று மற்றும் நாளை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது. அதன்படி தற்பொழுது சென்னையில் மதுரவாயில், போரூர், வளசரவாக்கம், ராமாபுரம், அம்பத்தூர், பாடி, கொரட்டூர், போரூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

அதேபோன்று ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரக்கோணம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. கடலூர் மாவட்டத்தில் காட்டுமன்னார்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. மேலும் செங்கல்பட்டு, திருவள்ளூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களிலும் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்து வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Widespread rain in 6 districts including Chennai


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->