வலுவடையும் காற்றழுத்தத் தாழ்வு பகுதி - தமிழகத்தில் வெளுத்து வாங்க போகும் மழை.!
three days rain in tamilnadu metereological center info
நேற்று முன்தினம் தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனையொட்டிய பகுதிகளில் உருவாகிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி மேற்கு திசையில் நகர்ந்து, தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும்.
இதைத் தொடர்ந்து, இந்தத் தாழ்வு மண்டலம் இரண்டு நாட்களில் வடமேற்கு திசையில் நகரத் தொடங்கி, தென்மேற்கு மற்றும் அதனையொட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் புயலாக வலுவடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, தமிழகத்தில் இன்று முதல் அடுத்த மாதம் 2-ந்தேதி வரை 4 நாட்களுக்கு தமிழகத்தில் பரவலாக மழை பெய்யக் கூடும். அதன் படி, இன்று காஞ்சீபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மழை பெய்யக் கூடும்.
நாளை காஞ்சீபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, தூத்துக்குடி மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை மறுதினம் புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம், விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக் கூடும் என்று தெரிவித்துள்ளது.
மேலும், சென்னையை பொறுத்தவரையில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
English Summary
three days rain in tamilnadu metereological center info