10 மாவட்டங்களில் கொட்டித் தீர்க்க போகும் மழை - வானிலை மையம் தகவல்.!
rain to ten districts in tamilnadu
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை, அந்தமான் கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி உள்ளிட்டவற்றால், நான்கு நாட்களுக்கு பரவலாக மழைக்கு வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

இந்த நிலையில், அடுத்த மூன்று மணி நேரத்தில் பத்து மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அந்த அறிவிப்பின் படி, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி, திருவாரூர், நாகை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
rain to ten districts in tamilnadu