வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி - வானிலை மையம் தகவல்.! - Seithipunal
Seithipunal


வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி - வானிலை மையம் தகவல்.!

கடந்த சில வாரங்களாகவே வளிமண்டலத்தின் மேல் அடுக்கு சுழற்சி மற்றும் காற்றின் திசை வேக மாறுபாடு உள்ளிட்டவற்றால் டெல்லி மற்றும் இமாசலபிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது.

இந்தக் கனமழையால் பல நகரங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து மக்கள் வீட்டை விட்டு வெளியில் வரமுடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது. அதுமட்டுமல்லாமல், இந்தக் கனமழையால் யமுனை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 

இதேபோன்று, மகாராஷ்டிரா, குஜராத், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களிலும் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில், வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி தெற்கு ஒடிசா நோக்கி நகரும் எனவும் இது மெதுவாக வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து வந்து வருகிற 26ம் தேதி வலுவடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

new air low pressure formed in bay of bengal


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->