தமிழகத்தில் 8 மாவட்டங்களில் அதிகரிக்கப் போகும் வெயில்.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.!!
mar 01 weather report in tamilnadu
தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த வாரம் ஒரு சில மாவட்டங்களில் லேசான மழை பெய்தது. தற்போது தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 01.03.2021 முதல் 04.03.2021 வரை தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும்.
தமிழகத்தின் மதுரை, திருச்சிராப்பள்ளி, தர்மபுரி, நாமக்கல், கரூர், சேலம், வேலூர் திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு ஒரு சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும்.
சென்னையை பொறுத்த வரை அடுத்த 24 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் .அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
English Summary
mar 01 weather report in tamilnadu