மக்களே உஷார்! மேலும் வலுவடைய கூடும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்...! - இந்திய வானிலை ஆய்வு மையம்
low pressure area may further strengthen India Meteorological Department
கடந்த 24-ந்தேதி தொடங்கிய தென்மேற்கு பருவமழை, தென் இந்தியா முழுவதும் மழை கொட்டித் தீர்க்க துவங்கி இருந்தது.இதன் காரணமாக வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து காணப்படுகிறது.

இதனால், மேற்கு வங்கம் மற்றும் அதனை ஒட்டிய வங்கதேச கடற்கரை பகுதிகளில் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது,வடமேற்கு வங்கக்கடலில் மையம் கொண்டுள்ளது.
இதனை இந்திய வானிலை ஆய்வு மையம், 'இது வடக்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேலும் வலுவடையக் கூடும்' என்று தெரிவித்துள்ளது.
மேலும், 'இந்த தாழ்வு மண்டலத்தால், கேரளா, கர்நாடகா மற்றும் தமிழக மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களான கோவை,திருநெல்வேலி, நீலகிரி, தேனி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்றும், நாளையும் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து காணப்படும்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே கடலோர மக்கள் பாதுகாப்பாக இருக்க தேவையில்லாமல் வெளியே எங்கும் செல்லாமல் வீட்டில் இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.
English Summary
low pressure area may further strengthen India Meteorological Department