அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படும் 05 லட்சம் பேர்: உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!
05 lakh people to be deported from the United States Supreme Court makes a dramatic ruling
அமெரிக்காவின்முன்னாள் அதிபர் ஜோ பைடன் ஆட்சிக்காலத்தில் மனிதாபிமான பரோல் திட்டத்தின் கீழ் கியூபா, ஹைதி, நிகரகுவா மற்றும் வெனிசுலாவை சேர்ந்த 5,32,000-க்கும் மேற்பட்டோர் சட்டப்பூர்வமாக அமெரிக்காவுக்குள் நுழைந்தனர்.
இந்நிலையில், இவர்களுக்கு வழங்கப்பட்ட சட்டப்பூர்வ அகதிகள் அந்தஸ்தை ரத்து செய்ய டிரம்ப் அரசுக்கு, அமெரிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இதனால், அவர்கள் நாடு கடத்தப்படும் அபாயத்தில் உள்ளனர்.

அத்துடன், அவர்கள் வெளியேற வேண்டும் என டிரம்ப் நிர்வாகம் கூறியதோடு, அவர்களுக்கு வழங்கப்பட்ட தற்காலிக அகதிகள் அந்தஸ்தும் ரத்து செய்யப்பட்ட்டுள்ளது. அவ்வாறு அவர்கள் வெளியேறவில்லை என்றால் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படுவார்கள் என எச்சரிக்கப்பட்டனர்.
டிரம்ப்பின் இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க நீதிமன்றம் தடை விதித்தது. இதனால், அவர்களுக்கு சற்று நம்மதி அடைந்தனர். ஆனால், இதனை எதிர்த்து அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

குறித்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், வெனிசுலா, கியூபா, ஹைதி மற்றும் நிகரகுவாவை சேர்ந்த 5,32,000 அகதிகளுக்கு வழங்கப்பட்ட சட்டப்பூர்வமான தற்காலிக அந்தஸ்தை ரத்து செய்வதற்கு அனுமதி வழங்கி தீர்ப்பளித்துள்ளது. இதனால், அவர்கள் நாடு கடத்தப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
English Summary
05 lakh people to be deported from the United States Supreme Court makes a dramatic ruling