2025-ஆம் ஆண்டுக்கான உலக அழகியாக முடிசூடிய தாய்லாந்தின் ஓபல் சுச்சாட்டா சுவாங் ஸ்ரீ..! - Seithipunal
Seithipunal


2025-ஆம் ஆண்டுக்கான உலக அழகியாக தாய்லாந்தை சேர்ந்த ஓபல் சுச்சாட்டா சுவாங் ஸ்ரீ பட்டத்தை வென்றுள்ளார்.  ஐதராபாத்தில் நடந்த உலக அழகி போட்டியின் இறுதிப்போட்டி இன்று ( மே 31) இரவு ஹைடைக்ஸ் அரங்கில் நடந்தது. சிறப்பு விருந்தினர்கள் மற்றும் பாலிவுட் நட்சத்திரங்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இதில், 108 நாடுகளைச் சேர்ந்த அழகிகள் கலந்து கொண்டனர். இந்தியா சார்பில், 'மிஸ் இந்தியா' பட்டம் வென்ற நந்தினி குப்தா பங்கேற்றார். 40 அழகிகள் பேர் காலிறுதிக்கு முன்னேறியதில், முதல் 08 இடங்களுக்குள் நுழையும் வாய்ப்பை நந்தினி குப்தா தவறவிட்டார்.

இந்நிலையில் தொடர்ந்து நடந்த இறுதிச் சுற்றில் தாய்லாந்தின் ஓபல் சுச்சாட்டா சுவாங் ஸ்ரீ 2025-ஆம் ஆண்டிற்கான உலக அழகியாக தேர்வாகியுள்ளார். எத்தியோப்பியாவை சேர்ந்த ஹசேட் டெரேஜே அட்மாசு இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார். 72 வது உலக அழகியாக தேர்வுசெய்யப்பட்டுள்ள ஓபல் சுச்சாட்டா சுவாங் ஸ்ரீக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Opal Suchata Chuang Sri from Thailand who was crowned Miss World 2025


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->