கொட்டித்தீர்க்கப்போகும் மேகங்கள்...! தமிழகத்தின் 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு...! - வானிலை மையம் அதிரடி அறிவிப்பு!
Clouds about pour Heavy rain likely 6 districts Tamil Nadu today Meteorological Department dramatic announcement
தமிழகத்தில் பருவமழை தீவிரம் படிப்படியாக அதிகரித்து வரும் நிலையில், கடலோர கர்நாடகா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டலச் சுழற்சி காரணமாக பல மாவட்டங்களில் மழைப்பொழிவு வலுப்பெற உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மேலும், தென்மேற்கு பருவமழை அரபிக்கடல், லட்சத்தீவு, கேரளா, கர்நாடகா, தமிழ்நாட்டின் சில பகுதிகள் மற்றும் வங்கக்கடலின் பரந்த பரப்புகளில் மேலும் முன்னேற்றம் கண்டுள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இன்று பல மாவட்டங்களில் இடியுடன் மழை
இன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை வரை பெய்யக்கூடும்.விருதுநகர், மதுரை, சிவகங்கை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ஈரோடு, சேலம், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூர், விழுப்புரம், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மலை மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.அதேபோல் தென்காசி, திருநெல்வேலி மலைப்பகுதிகள், தேனி, திண்டுக்கல், திருப்பூர் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளையும் தொடரும் மழை
நாளையும் தமிழகத்தின் பல பகுதிகளில் மழை நீடிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நீலகிரி, கோயம்புத்தூர் மலைப்பகுதிகள், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.மேலும் தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பூர், மதுரை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.
வெப்பநிலை குறைய வாய்ப்பு
ஜூன் 6 முதல் 9-ஆம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இன்று வெப்பநிலையில் பெரிய மாற்றம் இருக்காது என்றாலும், கடலோர மாவட்டங்களில் அதிக வெப்பமும் ஈரப்பதமும் காரணமாக மக்கள் அசௌகரியத்தை உணரக்கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சென்னை வானிலை எப்படி?
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை வரை பெய்ய வாய்ப்புள்ளது.இன்று அதிகபட்ச வெப்பநிலை 39 முதல் 40 டிகிரி செல்சியஸ் வரையும், குறைந்தபட்ச வெப்பநிலை 30 முதல் 31 டிகிரி செல்சியஸ் வரையும் பதிவாகக்கூடும்.நாளை வெப்பநிலை சற்று குறைந்து, அதிகபட்சமாக 38 முதல் 39 டிகிரி செல்சியஸும், குறைந்தபட்சமாக 29 முதல் 30 டிகிரி செல்சியஸும் நிலவக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதனால் மலை மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் வசிக்கும் மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
English Summary
Clouds about pour Heavy rain likely 6 districts Tamil Nadu today Meteorological Department dramatic announcement