காலையிலேயே குளு குளு செய்தி.. தமிழ்நாட்டில் இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டில் கோடை வெயில் கொளுத்தி வரும் சூழலில் நேற்று பதிவான வெப்பநிலையின் படி 14 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டி வெயில் கொளுத்தியுள்ளது. பரமத்தி வேலூர், வேலூர், ஈரோடு ஆகிய வட உள் மாவட்டங்களில் வெயிலானது அதிகளவில் பதிவாகியுள்ளது.

இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். இதற்கிடையே இன்று காலை சென்னையின் ஒரு சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. 

அதன் தொடர்ச்சியாக தற்போது டெல்டா மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி நாகப்பட்டினம் திருவாரூர் மற்றும் தஞ்சாவூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Chance to rain in 3 districts in Tamilnadu


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->