16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகம் தடை! - ஆஸ்திரேலியாவின் பின்னணியில் ஆந்திரா நடவடிக்கை - Seithipunal
Seithipunal


ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்ட சிறார்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்துவதில் புதிய தடை சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன் பின்னணியில், ஆஸ்திரேலியாவின் படிப்படி, ஆந்திர அரசு 16 வயதுக்குட்பட்ட சிறார்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதைத் தடை செய்யும் திட்டத்தை முன்னெடுத்து வருகிறது.

இந்த விவகாரத்தில், ஆந்திர மந்திரி நரா லோகேஷ் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது,"ஆஸ்திரேலியாவில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தை ஆய்வு செய்து, அதற்கேற்ப ஆந்திராவில் ஒரு வலுவான, நுண்ணறிவு நிறைந்த சட்டத்தை உருவாக்குகிறோம்.

குறிப்பிட்ட வயதுக்குட்பட்ட சிறார்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்தக் கூடாது. காரணம், அவர்கள் அங்கு பார்க்கும் தகவல்களை முழுமையாக புரிந்து கொள்ள முடியாது.

இதன் மூலம், சிறார்களின் மனவளர்ச்சி மற்றும் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்” எனத் தெரிவித்தார்.

இந்த நடவடிக்கை சிறார்களின் இணையப் பாதுகாப்பையும், சமூக ஊடகங்களில் எதிர்கால பாதிப்புகளை குறைக்கும் வகையில் அமையும் என அரசு வலியுறுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Social media banned children under 16 Andhra Pradesh takes action following Australia lead


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?




Seithipunal
--> -->