மக்களே உஷார் | உங்களுக்கு இப்படி எஸ்எம்எஸ் (SMS) வந்தா நம்பாதீங்க - வெளியான எச்சரிக்கை! - Seithipunal
Seithipunal


மின் கட்டணம் குறித்து வரும் மோசடி எஸ்எம்எஸ் (SMS -குறுஞ்செய்திகளை) நம்ப வேண்டாம் என்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் (டான்ஜெட்கோ) சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, "அண்மை காலமாக இன்றிரவு மின்சார சேவை துண்டிக்கப்படும் என்றும் கட்டணம் செலுத்தியிருந்தாலும் அபராதத்தை தவிர்க்க வாட்ஸ் அப் செயலியில் போலி லிங்குகள் வருகிறது.

மேலும், குறிப்பிட்ட கைபேசி எண்ணை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளுதல் போன்ற ஏமாற்று செயல்களின் வாயிலாக நுகர்வோர்களின் வங்கி கணக்கிலிருந்து பண மோசடிகள் நடைபெற்று வருகிறது

எனவே, மின் இணைப்பு துண்டிக்கப்படும் என வரும் மோசடி குறுஞ்செய்திகளை புறக்கணித்து விழிப்புணர்வோடு இருக்குமாறு நுகர்வோர்களுக்கு டான்ஜெட்கோவின் பணிவான வேண்டுகோள். 

மேலும், மின் இணைப்பின் நிலை மற்றும் மின் கட்டண தகவல்களை தமிழ்நாடு மின்சார வாரியம் அதிகாரபூர்வ இணையதளத்தில் https://tangedco.org சரிபார்க்கவும், மோசடியாக வரும் எண்களுக்கு பதிலளிக்கவோ அல்லது திரும்ப அழைக்கவோ வேண்டாம். 

மேலும் 1930 சைபர் குற்ற உதவி எண்ணிற்கு தெரிவிக்கவும்." 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

SMS Fraud issue warning tamilnadu


கருத்துக் கணிப்பு

வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப்பணி...



Advertisement

கருத்துக் கணிப்பு

வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப்பணி...




Seithipunal
--> -->