திருப்பூர் || பட்டப்பகலில் இளம்பெண் குத்திக் கொலை - காதலன் வெறிச்செயல்.! - Seithipunal
Seithipunal


திருப்பூர் || பட்டப்பகலில் இளம்பெண் குத்திக் கொலை - காதலன் வெறிச்செயல்.!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அவிநாசி பகுதியைச் சேர்ந்தவர் சத்தியஸ்ரீ. இவர் திருப்பூர் 60 அடி சாலையில் உள்ள தனியார் மருத்துவனையில் வரவேற்பாளராக பணிபுரிந்து வந்தார். 

இவரும், அதே பகுதியைச் சேர்ந்த நரேந்திரன் என்பவரும் காதலித்து வந்துள்ளனர். ஆனால், இவர்களுக்கிடையே கடந்த சில நாள்களாக கருத்து வேறுபாடு ஏற்பட்டு பேச்சுவார்த்தை இல்லாமல் இருந்துள்ளது.

இந்த நிலையில், நரேந்திரன் வழக்கம்போல் பணிக்கு வந்த சத்தியஸ்ரீயிடம் பேசியுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

இதனால், ஆத்திரமடைந்த நரேந்திரன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சத்யாஸ்ரீயின் கழுத்தை அறுத்துள்ளார். இதில், பலத்த காயமடைந்த சத்யஸ்ரீ ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

இதன் பின்னர் நரேந்திரனும் தன்னை தானே கத்தியால் குத்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த மருத்துவமனை ஊழியர்கள் சம்பவம் குறித்து போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். 

அதன் படி விரைந்து வந்த போலீசார் நரேந்திரனை மீட்டு சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், உயிரிழந்த சாத்தியஸ்ரீயின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதைத்தொடர்ந்து போலீசார் சம்பவம் தொடர்பாக நரேந்தினிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பூரில் பட்டப்பகலில் இளம் பெண் கத்தியால் கழுத்தை அறுத்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

youth sucide attempt after kill girl friend in tirupur


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->