குற்றாலத்திற்கு சுற்றுலா சென்ற இளைஞர்.! இருசக்கர வாகன விபத்தில் உயிரிழந்த சோகம்.! - Seithipunal
Seithipunal


குற்றாலத்திற்கு சுற்றுலா சென்ற இளைஞர் இருசக்கர வாகன விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மலையடிப்பட்டி காந்திநகர் பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ் என்பவரின் மகன் ரமேஷ் (21). இவர் நேற்று மாலை தனது நண்பர் சரவணக்குமாருடன் குற்றாலத்திற்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.

அப்பொழுது ராஜபாளையம் தென்காசியில் சாலையில் தளவாய்புரம் விலக்கு அருகே சென்ற போது, திடீரென நிலை தடுமாறிய இருசக்கர வாகனம் சாலையோரம் இருந்த மயில்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது. 

இதில் இரண்டு பேரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்த நிலையில், அப்பகுதியை சேர்ந்தவர்கள் இரண்டு பேரையும் விட்டு சிகிச்சைக்காக ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

பின்பு ரமேஷ் மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்து உள்ளார். இதையடுத்து இந்த முகத்தை குறித்து தகவல் அறிந்து வந்த சேத்தூர் புறக்காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Youth killed in twowheeler accident in virudhunagar


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->