#திருநெல்வேலி : வாலிபர் கொடூரமாக வெட்டிக்கொலை..! போலீசார் தீவிர விசாரணை...! - Seithipunal
Seithipunal


திருநெல்வேலி மாவட்டத்தில் வாலிபரை சரமாரியாக வெட்டி கொலை செய்த மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

திருநெல்வேலி மாவட்டம் பழவூர் பகுதியை சேர்ந்த ஐயப்பன் என்பவரின் மகன் கூலித்தொழிலாளி அஜித் (25). இவர் நேற்று மாலை வழக்கம் போல் சிலருடன் சேர்ந்து மது குடித்துள்ளார். அப்பொழுது அஜித்துக்கும், மற்றவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த அவர்கள் அஜித்தை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி உள்ளனர்.

இதில் பலத்த காயமடைந்த அஜித் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் இதுகுறித்து பழவூர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், உயிரிழந்த அஜித்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் அஜித்தை வெட்டி கொன்றவர்கள் யார்? எதற்காக கொலை செய்தார்கள்? என்று பல்வேறு கோணங்களில் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Youth hacked to murder in tirunelveli


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->