திருச்சியில் பயங்கரம்.! பாரில் இளைஞர் வெட்டிக்கொலை... 5 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்...! - Seithipunal
Seithipunal


திருச்சி மாவட்டத்தில் பாரில் மது அருந்திய இளைஞரை மர்மகும்பல் வெட்டிக்கொலை செய்த சம்பவம் பகுதியில் பெயரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி மாவட்டம் சமயபுரம் பகுதியில் உள்ள கடையில் மாலை கட்டும் வேலை பார்த்து வந்தவர் பாபு. இவர் சமயபுரம் நால்ரோடு அருகே உள்ள மதுபான கடை பாரில் மது அருந்தியுள்ளார். அப்பொழுது அங்கு வந்த 5 பேர் கொண்ட கும்பல் திடீரென பாபுவை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

இதில் பலத்த காயமடைந்த பாபுவை அப்பகுதியில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு பரிசோதனை செய்த மருத்துவர் பாபு ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், பாபுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த சமயபுரம் போலீசார், பாபுவை கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய ஐந்து பேரை வலைவீசி தீவிரமாக தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Youth hacked to murder in a bar in Trichy


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->