பாகுபலி 3ம் பாகம்..ராஜமவுலி சொன்ன அப்டேட்!! - Seithipunal
Seithipunal


ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, சத்யராஜ், நாசர், அனுஷ்கா, தமன்னா, ரம்யா கிருஷ்ணன் ஆகியோர்  நடித்த பாகுபலி திரைப்படம் 2015 இல் வெளியாகி உலக அளவில் அதிக வசூல் செய்த இந்திய திரைப்படம் என்ற சாதனையை நிகழ்த்தியது. தொடர்ந்து பாகுபலி இரண்டாம் பாகம் வெளிவந்தது. இரண்டு பாகங்களும் 2000 கோடிக்கு மேல் வசூல் ஈட்டியது. பாகுபலி படத்தின் மூன்றாம் பாகத்தையும் உருவாக்க வேண்டும் என்று ரசிகர்கள் தொடர்ந்து விருப்பம் தெரிவித்து வருகிறார்கள்.

பாகுபலி மூன்றாம் பாகம் வருமா என்று பிரபாஸிடம் கேள்வி எழுப்பிய போது, பாகுபலி மூன்றாம் பாகம் எடுப்பது எனது கையில் இல்லை அது டைரக்டர் ராஜமவுலி கையில் இருக்கிறது. பாகுபலி எப்போது எனது இதயத்துக்கு நெருக்கமாக இருக்கும் என்றார்.  இந்த நிலையில் ஐதராபாத்தில் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இயக்குனர் ராஜமவுலி பாகுபலி மூன்றாம் பாகம் வருமா என்ற கேள்விக்கு பதில்அளித்தார். பாகுபலி என் மனதில் இடம் பெற்ற முக்கியமான படம். இந்த படத்தில் மூன்றாம் பாகம் வருமா என்று கேட்கிறார்கள் பாகுபலி மூன்றாம் பாகம் கண்டிப்பாக வரும் இது குறித்து பிரபாஸிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது என்றார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Baahubali 3rd part updated by Rajamouli


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->