10ம் வகுப்பு மாணவியை கடத்தி பாலியல் வன்கொடுமை.. இளைஞர் மீது பாய்ந்தது போக்சோ..!
youth arrested In POCSO Due to Harrassing Girl In Nagai
10ம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர்.
நாகப்பட்டினம் மாவட்டம், கூத்தூர் பகுதியில் 10ம் வகுப்பு மாணவி வசித்து வருகிறார். இவர் அந்த பகுதியை சேர்ந்த மணிரத்தினம் என்பவருடன் பழகி வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 15ஆம் தேதி பள்ளிக்கு சென்ற அவரை காணவில்லை என அவரது பெற்றோர் காவல்துறையில் புகார் அளித்தனர்.
இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டனர். அப்போது மணிரத்தினம் மாணவியை கடத்தி சென்றது தெரியவந்தது. இதனை அடுத்து, திருப்பூரில் இருந்த மாணவியை மீட்ட காவல்துறையினர் அவரிடம் விசாரணையில் ஈடுப்பட்டனர்.
அப்போது, மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. இதனை அடுத்து, மணிரத்தினத்தை கைது செய்தனர். அதன்பின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
English Summary
youth arrested In POCSO Due to Harrassing Girl In Nagai