கன்னியாகுமரி || முகநூலில் பிளாக் செய்த காதலி - ஆத்திரத்தில் வாலிபர் செய்த கொடூரம்.! - Seithipunal
Seithipunal


கன்னியாகுமரி || முகநூலில் பிளாக் செய்த காதலி - ஆத்திரத்தில் வாலிபர் செய்த கொடூரம்.!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குருந்தன்கோடு பகுதியைச் சேர்ந்த பிரவின் ரஞ்சித் என்பவருக்கும், ஆலங்கோடு பகுதியை சேர்ந்த தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் பொறியியல் பட்டதாரியான ஷைனி என்பவருக்கும், கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு முகநூல் மூலம் பழக்கம் ஏற்பட்டது.

நாளடைவில் இந்தப் பழக்கம் காதலாக மாறியது. இதையடுத்து இருவரும் தனியாக சந்தித்து தங்களது காதலை வளர்த்து வந்தனர். இதற்கிடையே பிரவின் ரஞ்சித்திற்கு குடிப்பழக்கம் இருப்பதாய் அறிந்த ஷைனி அவருடனான சந்திப்பை குறைக்க தொடங்கினார். 

அதன் பின்னர் முகநூல் பக்கத்தை பிளாக் செய்து தொடர்பை முற்றிலுமாக முறித்து கொண்டார். இதனால் ஆத்திரம் அடைந்த பிரவின் ரஞ்சித், வேலையை முடித்துவிட்டு வீடு திரும்பிய ஷைனியை கத்தியால் குத்திவிட்டு தப்பித்துச் சென்றார். 

இதில் ஷைனி ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்து விழுந்துள்ளார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் பெண்ணை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் இந்தச் சம்பவம் குறித்து போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். 

அதன் படி போலீசார் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக இருந்த பிரவின் ரஞ்சித்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

youth arrested for tried kill girl friend in kanniyakumari


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->