16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞர்.. போக்சோவில் கைது.! - Seithipunal
Seithipunal


ஈரோடு மாவட்டத்தில் 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீதர் (24). இவர் அதே பகுதியை சேர்ந்த 16 வயதுடைய சிறுமியுடன் பழகி வந்துள்ளார். இதையடுத்து சிறுமியுடனான பழக்கம் நாளடைவில் காதலாக மாறிய நிலையில், இருவரும் பேசி காதலை வளர்த்து வந்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து ஸ்ரீதர் சிறுமியிடம் ஆசை வார்த்தைகள் கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இந்நிலையில் சிறுமியின் நடவடிக்கையில் மாற்றத்தை உணர்ந்த பெற்றோர் அவரிடம் விசாரித்தனர். இதில் சிறுமி நடந்ததை கூறியுள்ளார்.

இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் இது குறித்து ஈரோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து ஸ்ரீதரை கைது செய்தனர். மேலும் அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Youth arrested for rape 16 year old girl in erode


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->