8ம் வகுப்பு மாணவியை கடத்தி திருமணம் செய்த இளைஞர் கைது..! - Seithipunal
Seithipunal


8ம் வகுப்பு மாணவியை கடத்தி திருமணம் செய்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர்.

ஈரோடு மாவட்டம், காஞ்சிக்கோவில் பகுதியில் 13 வயது சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். இவர் அங்குள்ள பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், மாணவி திடீரென மாயமானதால் அவரது பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர்.

உடனடியாக காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் வழக்குபதிவு செய்த காவல்துறையினர் மாணவியை  தேடி வந்தனர். பெத்தாம்பாளையம் நால்ரோடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்ட போது அங்கு வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனையில் ஈடுப்பட்டனர்.

அதில், மாயமான மாணவி மற்றும் 2 வாலிபர்கள் இருந்தனர். அவர்களிடம் பள்ளி செல்லும் போது மாணவிக்கு கார்த்திக் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த மாணவியை கடத்தி திருமணம் செய்ததும் தெரியவந்தது. அவர்களை கைது செய்த காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

youth arrested due to marry a minor Girl In Thirupur


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->