#திருநெல்வேலி || வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை - போலீசார் விசாரணை
Youngman suicide in Tirunelveli
திருநெல்வேலி மாவட்டத்தில் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருநெல்வேலி மாவட்டம் சீவலப்பேரி அருகே உள்ள கட்டளை கிராமத்தை சேர்ந்த சிவன் என்பவரின் மகன் இசக்கிமுத்து(28). இவர் அப்பகுதியில் உள்ள செங்கல் சூலையில் வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில் இசக்கிமுத்து நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதைப் பார்த்து அதிர்ச்சடைந்த உறவினர்கள் இது குறித்து, சீவலப்பேரி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், இசக்கிமுத்துவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து, இசக்கிமுத்து தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Youngman suicide in Tirunelveli