150 பவுன் நகை கேட்டு கொடுமை: மதுரை செல்லூரில் இளம்பெண் பெண் தற்கொலை: கணவன் உள்பட மணமகன் வீட்டார் மீது புகார்..!
Young woman commits suicide due to dowry harassment in Madurais Sellur
மதுரை செல்லூரில் வரதட்சணை கொடுமையால் பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெண்ணின் தற்கொலை சம்பவம் குறித்து அவரின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.குறித்த புகாரின் பேரில் கணவர் ரூபன்ராஜ் மாமனார் இலங்கேஸ்வரன், மாமியார் தனபாக்கியம் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கடந்தாண்டு ரூபன்ராஜ் - பிரியதர்ஷினிக்கு திருமணம் நடந்துள்ளது. திருமணத்திபோது மணமகன் வீட்டார் வரதட்சணையாக 300 சவரன் நகை கேட்டுள்ளனர். அப்போது பெண் வீட்டார் 150 சவரன் நகை கொடுத்துள்ளதாக தெரிகிறது.
மேலும் மீதமுள்ள 150 சவரன் நகைகள் கேட்டு மணமகன் வீட்டார் தரப்பில் தகராறில் ஈடுபட்டு வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக ஏற்பட்ட பிரச்சனையில் ரூபன்ராஜ் - பிரியதர்ஷினி பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில், பிரியதர்ஷினி தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு செய்துகொண்டுள்ளார். பிரியதர்ஷினி தற்கொலை தொடர்பாக அவரது கணவர் ரூபன் ராஜ், மாமனார் இலங்கேஸ்வரன், மாமியார் தன்பாக்கியம் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
English Summary
Young woman commits suicide due to dowry harassment in Madurais Sellur