அக்கம் பக்கதினர் புறணி பேச்சால் இளம்பெண் எடுத்த தவறான முடிவு.. ! - Seithipunal
Seithipunal


அக்கம்பக்கதினர் தவறாக பேசியதால் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம், வெண்ணந்தூர் நரிகள் கரடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜு. அவருக்கு செல்லம்மாள்  என்ற மனைவியும் அஞ்சலை  என்ற மகளும் உள்ளனர்.  அஞ்சலை பள்ளி படிப்பை முடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்துள்ளார்.

இவர் அவரது உறவினரை காதலித்து வந்துள்ளார். இது இரு குடும்பத்தினருக்கும் தெரியவரவே திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். இந்நிலையில், மாணவியை அக்கம்பக்கதில் உள்ளவர்கள் தவறாக பேசியதாக கூறப்படுகிறது.

இதனால், மன உளைச்சலுக்கு ஆளான மாணவி என் சாவுக்கு யாரும் காரணம் இல்லை, என்னுடைய சூர்யாவை தண்டிக்கக் கூடாது. நான் உண்மையானவள். பெற்றோர்கள் தான் முக்கியம் என நினைப்பவள். அக்கம் பக்கத்தில் என்னை தவறாக கூறியது போல் நான் கிடையாது. நான் நல்லவள்’  என கடிதம் எழுதி வைத்துவிட்டு கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்புதுறையினர் மாணவியின் சடலத்தை மீட்டனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Young Woman C omitted Suicide Near Namakkal


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->