சின்னமனூர் அருகே மூதாட்டியை பதற வைத்த வாலிபர்! கையும் களவுமாக சிக்கியது எப்படி? - Seithipunal
Seithipunal


சின்னமனூர் அருகே போலீஸ் என்று தெரிவித்து பணம் பறித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்:

தேனி மாவட்டம்: சின்னமனூர் கருங்கட்டான் குளம் பகுதியை சேர்ந்தவர் பாத்திமா. இவர் வயதான மூதாட்டியாவார். பாத்திமா அவரது மகள் வீட்டிற்கு செல்வதற்காக காவலர் குடியிருப்பு அருகே நடந்து சென்றிருந்தார்.

அப்போது அந்த வழியாக வந்த வாலிபர் ஒருவர், தான் போலீஸ் என்றும் உங்கள் பையில் உள்ளதை சோதனையிட வேண்டும் என தெரிவித்துள்ளார். 

மேலும் மூதாட்டி வைத்திருந்த துணிப்பையில் இருந்த ரூ.3 ஆயிரம் மற்றும் செல்போன், ரேசன் கார்டை பறித்து கொண்டு அங்கிருந்து தப்பி சென்றார். 

இதனால் பதறிப்போன மூதாட்டி இது குறித்து சின்னமனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை சோசாதனை செய்த போது, மூதாட்டியிடம் பணத்தை பறித்து சென்ற வாலிபர் பதிவாகி இருந்தார். 

அதனை வைத்து போலீசார், தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு, மூதாட்டியிடம் கைவரிசை காட்டிய வாலிபரை கையும் களவுமாக பிடித்தனர். 

பிடிபட்ட நபரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், அவர் கோட்டூர் மண்டுகருப்பணசாமி கோவில் தெருவை சேர்ந்த விஷ்ணு என தெரிய வந்தது. 

தேனி மாவட்டத்தில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் இவர் மீது பல வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது. பின்னர் போலீசார் விஷ்ணுவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

young man extorted money old woman


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->