4 வருட காதல் மனஸ்தாபத்தால் பேச மறுத்த காதலி.. இளைஞர் எடுதத விபரீத முடிவு..! - Seithipunal
Seithipunal


காதலி பேசாததால் இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர், பகுதியை சேர்ந்தவர்  செந்தில்குமார். இவர் அந்த பகுதியில் பெயிண்டாரக வேலை செய்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.

இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாற இருவரும் 4 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.  இந்நிலையில் அந்த பெண்ணுக்கும் செந்திலுக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால், கடந்த சில நாட்களாக செந்திலுடன் அந்த பெண் பேசவில்லை என கூறப்படுகிறது.

இதனால், மனமுடைந்த அவர் வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த  காவல்துறையினர்  அவரின் சடலத்தை மீட்டு பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். காதலி பேசாததால் இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Young man commits suicide because his girlfriend did not speak


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->