பரங்கிமலை மாணவி உயிரிழந்த சம்பவம் அடங்குவதற்குள்.. அடுத்து ஒரு மாணவிக்கு கொலை முயற்சி.!
Young man attempt murder to college girl in Chennai
காதலிக்க மறுத்த கல்லூரி மாணவியை வீடு புகுந்து கொலை செய்ய முயற்சித்த வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் காதலிக்க மறுத்த கல்லூரி மாணவியை ரயிலில் தள்ளி கொன்ற சம்பவம் அடங்குவதற்குள் அடுத்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
அதன்படி சென்னை சூளைமேடு பகுதியில் வசித்து வரும் கல்லூரி மாணவியை அதே பகுதியை சேர்ந்த ரஷீத் (வயது 28) என்ற இளைஞர் ஒருவர் ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். இளைஞர் பலமுறை முயற்சித்தும் மாணவி காதலை ஏற்கவில்லை என கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மாணவியும் அவரது தாயும் வீட்டில் தனியாக இருந்த சமயத்தில் இளைஞர் வீட்டிற்குள் புகுந்து தகராறு செய்துள்ளார். அப்போது மாணவி மீது பாய்ந்து கடுமையாக தாக்கி கொலை செய்ய முயற்சித்துள்ளார்.
இதனையடுத்து தாயும், மகளும் கத்தி கூச்சலிட்டதை அடுத்து அருகில் இருந்தவர்கள் ஓடி வர இளைஞர் அங்கிருந்து தப்பி ஓடிள்ளார். மேலும் இளைஞர் என்றைக்கு இருந்தால் நான் தான் உனக்கு தாலி கட்டுவேன் இல்லாவிட்டால் உன்னை கொன்று விடுவேன் என்று மிரட்டி சென்றுள்ளார். இதனையடுத்து சூளைமேடு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. தற்போது வாலிபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
English Summary
Young man attempt murder to college girl in Chennai