சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட வாலிபர்... போக்சோவில் கைது.! - Seithipunal
Seithipunal


திருப்பூரில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞரை போக்சோவில் போலீசார் கைது செய்தனர்.

திருப்பூரை சேர்ந்த, 17 வயதுடைய சிறுமி மாநகராட்சி பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், சிறுமியிடம் முதலிபாளையத்தை சேர்ந்த பனியன் தொழிலாளியான ரியாஸ் அகமது(23) என்பவர் பழகி வந்துள்ளார்.

பின்பு சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி பழகி வந்த ரியாஸ் அகமது, சிறுமியுடன் மாயமானார். இந்நிலையில் சிறுமி திடீரென மாயமானதால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் இதுகுறித்து திருப்பூர் தெற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். 

இந்த புகாரின் அடிப்படையில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் ரியாஸ் அகமது, சிறுமியை மேட்டுப்பாளையத்துக்கு அழைத்து சென்றும், அங்கு சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதும் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து சிறுமியை மீட்ட போலீசார் ரியாஸ் அகமதுவை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். பின்பு அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Young man arrested sexually harassed a girl in Tiruppur


கருத்துக் கணிப்பு

கரூர் த.வெ.க கூட்ட நெரிசல் விவகாரம்: விஜய்-யின் விளக்கம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

கரூர் த.வெ.க கூட்ட நெரிசல் விவகாரம்: விஜய்-யின் விளக்கம்...




Seithipunal
--> -->