இன்ஸ்டாவில் வைரலான உ.பி முதல்வரின் சர்ச்சை புகைப்படம் - வாலிபர் கைது.!!
youth arrested for published up cm photo in insta
உத்தரபிரதேசம் மாநிலத்தின் முதலமைச்சராக யோகி ஆதித்யநாத் செயல்பட்டு வருகிறார். பாஜக மூத்த தலைவரான இவருடைய புகைப்படத்தை சர்ச்சைக்குரிய வகையில் சித்தரித்து மர்ம நபர் ஒருவர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

அந்த புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலான நிலையில் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், யோகி ஆதித்யநாத் குறித்து சர்ச்சைக்குரிய புகைப்படம் வெளியிட்ட அம்மாநிலத்தின் பாக்பத் மாவட்டம் ஹெர்கா கிராமத்தை சேர்ந்த ஜுனைத் என்ற இளைஞர் என்பது தெரியவந்தது.
இதையடுத்து, போலீசார் ஜுனைத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரிடம் சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
youth arrested for published up cm photo in insta