இன்ஸ்டாவில் வைரலான உ.பி முதல்வரின் சர்ச்சை புகைப்படம் - வாலிபர் கைது.!!  - Seithipunal
Seithipunal


உத்தரபிரதேசம் மாநிலத்தின் முதலமைச்சராக யோகி ஆதித்யநாத் செயல்பட்டு வருகிறார். பாஜக மூத்த தலைவரான இவருடைய புகைப்படத்தை சர்ச்சைக்குரிய வகையில் சித்தரித்து மர்ம நபர் ஒருவர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

அந்த புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலான நிலையில் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், யோகி ஆதித்யநாத் குறித்து சர்ச்சைக்குரிய புகைப்படம் வெளியிட்ட அம்மாநிலத்தின் பாக்பத் மாவட்டம் ஹெர்கா கிராமத்தை சேர்ந்த ஜுனைத் என்ற இளைஞர் என்பது தெரியவந்தது. 

இதையடுத்து, போலீசார் ஜுனைத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரிடம் சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

youth arrested for published up cm photo in insta


கருத்துக் கணிப்பு

கரூர் த.வெ.க கூட்ட நெரிசல் விவகாரம்: விஜய்-யின் விளக்கம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

கரூர் த.வெ.க கூட்ட நெரிசல் விவகாரம்: விஜய்-யின் விளக்கம்...




Seithipunal
--> -->