நெல்லை :: சிறுமிக்கு பாலியல் தொல்லை.! தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதிப்பு.!
worker who sexually harassed a girl was sentenced to life imprisonment in tirunelveli
திருநெல்வேலி மாவட்டத்தில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
திருநெல்வேலி மாவட்டம் சாலிகுமாரபுரம் பகுதியை சேர்ந்தவர் தொழிலாளி ராஜன் (50). இவர் சம்பவத்தன்று சிறுமி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து சிறுமி பெற்றோரிடம் கூறியுள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த, சிறுமியின் தாயார் உவரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டு போக்சோ சட்டத்தின் கீழ் ராஜனை கைது செய்தனர்.
இதையடுத்து தொடர்பான வழக்கு நெல்லை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில் ராஜன் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளி ராஜனுக்கு ஆயுள் தண்டனையும், ரூபாய் 26 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
English Summary
worker who sexually harassed a girl was sentenced to life imprisonment in tirunelveli