#திருவண்ணாமலை : 2 சிறுமிகள் பலாத்காரம் - தொழிலாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை - Seithipunal
Seithipunal


திருவண்ணாமலை மாவட்டத்தில் இரண்டு சிறுமிகளை பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம் தேனிமலை பகுதியை சேர்ந்தவர் தொழிலாளி வீராசாமி(46). இவர் விளையாடிக் கொண்டிருந்த 8 மற்றும் 10 வயதுடைய 2 சிறுமிகளை கடந்த 2016-ம் ஆண்டு உணவுப் பொருட்கள் தருவதாக ஆசைவார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும் இதுகுறித்து வெளியே யாரிடமும் சொல்லக்கூடாது என்று சிறுமிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து அறிந்த சிறுமிகளின் பெற்றோர் இதுகுறித்து திருவண்ணாமலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதைத்தொடர்ந்து, இது தொடர்பான வழக்கு திருவண்ணாமலை போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, இரண்டு சிறுமிகளை பலாத்காரம் செய்த வீராசாமிக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Worker who raped 2 girls gets double life sentence in Tiruvannamalai


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->