மூன்று இடங்களில் பாலங்கள் அமைக்கும் பணிகள்.. எதிர்கட்சித் தலைவர் சிவா தொடங்கி வைத்தார்!
Work is being done to build bridges in three locations The opposition leader Siva has inaugurated it
வி.மணவெளி கிராமத்தில் மூன்று இடங்களில் ரூ. 36 லட்சம் மதிப்பீட்டில் மூன்று சிறிய பாலங்கள் அமைக்கும் பணிகளை எதிர்கட்சித் தலைவர் இரா. சிவா அவர்கள் தொடங்கி வைத்தார்.
வில்லியனூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வி.மணவெளி கிராமத்தில் மணிமேகலை நகர், பாலாஜி நகர் மற்றும் பாலாஜி நகர் விரிவாக்கம் ஆகிய பகுதிகளை இணைக்கும் வகையில், ஆத்துவாய்க்கால் கிளைக் கால்வாயின் குறுக்கே மூன்று இடங்களில் பொதுப்பணித்துறை மூலம் ரூபாய் 36 லட்சத்து இருபத்து ஆறாயிரம் மதிப்பீட்டில் சிறிய பாலம் (ஆர்.சி.சி) அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது. இதில் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான இரா. சிவா அவர்கள் கலந்துகொண்டு பூமி பூஜை செய்து பணியினை தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை நீர்ப்பாசன கோட்ட செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணன், உதவிப்பொறியாளர் மதிவாணன், இளநிலை பொறியாளர் சங்கர் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் தர்மராஜ், கலியபெருமாள், ஞானசுந்தரம், கந்தசாமி, பாலகுரு, வாசு, நடராஜன், ராஜேந்திரன், முருகன், தக்ஷ்ணாமூர்த்தி, பூபாலன், ஞானவேல், ஜீவா, மணி, முருகதாஸ், சிவா, பலராமன், சரவணன், வெற்றிவேல், ராஜேஷ், திமுக நிர்வாகிகள் தொகுதி செயலாளர் மணிகண்டன், பொதுக்குழு உறுப்பினர் ராமசாமி, அவைத் தலைவர் ஜலால், ஆதிதிராவிடர் அணி துணை அமைப்பாளர் காலி, ஆதிதிராவிட அணி துணைத்தலைவர் கதிரவன், தொகுதி துணை செயலாளர் ஜெகன்மோகன், தொகுதி செயற்குழு உறுப்பினர்கள் சுப்பிரமணியன், அக்பர், கிளைக் கழக நிர்வாகிகள் சபரி, ஜனா, மிலிட்டிரி முருகன், வெங்கடேசன், சராபுதீன், கமல்பாஷா, துர்கா நகர் ரமேஷ், கார்த்திகேயன், ரகு, சந்தோஷ், அன்பு ஆகியோர் கலந்து கொண்டனர்.
English Summary
Work is being done to build bridges in three locations The opposition leader Siva has inaugurated it