உஷார்! தமிழகத்தில் 10 மணி வரை 6 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு...! - வானிலை மையம்
Warning Chance of rain in 6 districts of Tamil Nadu till 10 am Meteorological Department
சென்னை வானிலை ஆய்வு மையம்,'மத்திய மேற்குகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.

இதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்' என்று தெரிவித்திருந்தது.
இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம், தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இன்று இரவு 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ளது.
அவ்வகையில், கோயம்புத்தூர், நீலகிரி, தென்காசி மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆகையால் மக்கள் முன்னெச்சரிக்கையாக செயல் பட வேண்டுமென்று கேட்டுக்கொள்ளப் படுகிறது.
English Summary
Warning Chance of rain in 6 districts of Tamil Nadu till 10 am Meteorological Department