குன்னூர் அருகே கார் மீது மோதிய லாரி குடியிருப்பு பகுதியில் 30 அடி அந்தரத்தில் தொங்கியதால் பாப்பரப்பு..! - Seithipunal
Seithipunal


நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே கட்டுப்பாட்டை இழந்து ஓடிய லாரி ஒன்று சாலையோரத்தில் நின்றிருந்த காரின் மீது மோதி, 30 அடி உயரத்தில் அந்தரத்தில் தொங்கியதால் பரபரப்பு ஏற்பட்ட்டுள்ளது.

ஊட்டியில் இருந்து மேட்டுப்பாளையம் காய்கறி மண்டிக்கு காய்கறி லோடு லாரி காலியாக சென்று கொன்டிருந்துள்ளது. லாரியை ஊட்டி சேர்ந்த ஹரி என்பவர் ஓட்டி சென்றுள்ளார். குறித்த லாரி குன்னூர்-ஊட்டி சாலையில் பாய்ஸ் கம்பெனி அருகே சி.டி.சி. காலனி அருகே தாழ்வான பகுதியை நோக்கி வரும் போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த ஓடியுள்ளது. 

அப்போது, குடியிருப்பு பகுதியின் சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் மீது லாரி மோதியுள்ளது. பின்னர் சாலையோர குடியிருப்பின் மேல் தளத்தில் சுமார் 30 அடி உயரத்தில் அந்தரத்தில் தொங்கியவாறு பாய்ந்து நின்றுள்ளது. குறித்த லாரி மோதியதால் கார் தூக்கி வீசப்பட்டு தலைகுப்புற கவிழ்ந்துள்ளது.

குறித்த விபத்தில் லாரி டிரைவருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ள நிலையில், அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு குன்னூர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். லாரி வீட்டின் மேல் அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருந்ததால், குன்னூர் தீயணைப்புத்துறையினர் உடனடியாக வந்துள்ளனர். பின்னர்  நெடுஞ்சாலைத்துறை மற்றும் போலீசார் உதவியோடு கிரேன் மூலம் லாரியை மீட்கும் பணி நடைபெற்றுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

A lorry that hit a car near Coonoor was left hanging 30 feet above a residential area causing a commotion


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->