இந்தியா தண்ணீர் தரவில்லை என்றால், பாகிஸ்தான் போர் செய்யும்..பிலாவல் பூட்டோ எச்சரிக்கை!
If India does not provide water Pakistan will go to war Bilawal Bhutto warns
சிந்து நதிநீர் ஒப்பந்தத்தின் அடிப்படையில் தண்ணீர் பகிர்வு செய்யாத இந்தியா, ஒப்பந்தத்தை சஸ்பெண்ட் செய்துள்ளதாக கூறிய பாகிஸ்தான் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் பிலாவல் பூட்டோ-சர்தாரி, அதற்கெதிராக பாகிஸ்தான் போர் நடவடிக்கைக்கு தயாராகும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சமீபத்தில், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பதிலடியாக , இந்தியா பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களைத் தாக்கியதில் நூற்றுக்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே முற்றுப்போக்கான நிலை ஏற்பட்டது. பின்னர் பேச்சுவார்த்தையின் மூலம் பதற்றம் குறைக்கப்பட்டது.
இந்த நிலையில், இந்தியா சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை (Indus Waters Treaty) சஸ்பெண்ட் செய்தது, அதற்கெதிராக பாகிஸ்தான் கண்டனம் தெரிவித்தது. உள்துறை அமைச்சர் அமித் ஷா, இந்த முடிவு திரும்பப் பெறப்படாது என்றும் அறிவித்திருந்தார்.
இதை தொடர்ந்து பிலாவல் பூட்டோ கூறியது:“இந்தியாவிடம் இரு தேர்வுகள் மட்டுமே உள்ளன. ஒன்று – நியாயமான முறையில் தண்ணீரை பகிர்வது; இல்லையெனில், நாங்கள் தண்ணீரை முற்றிலுமாக திறந்து விடுவோம். இந்தியா சஸ்பெண்ட் முடிவை கட்டாயமாக்க முயன்றால், பாகிஸ்தான் போர் செய்யும். பேச்சுவார்த்தை இல்லாமல் பயங்கரவாதம் தொடர்பாக ஒருங்கிணைப்பு இல்லாத நிலை தொடர்ந்தால், இரு நாடுகளும் வன்முறையின் பாதையில் செல்லும்”, என்றார்.
இந்தக் கருத்துகள் தெற்காசியாவில் மீண்டும் பதற்றமான சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளன. இந்தியா இதுவரை இந்த கருத்துக்கு முழுமையான பதிலளிப்பை வழங்கவில்லை.
English Summary
If India does not provide water Pakistan will go to war Bilawal Bhutto warns