ஈரான்–இஸ்ரேல் மோதல்.. தமிழக மீனவர்களை மீட்க குடும்பத்தினர் கோரிக்கை!
Iran-Israel conflict Families demand the rescue of Tamil Nadu fishermen
ஈரான் மற்றும் இஸ்ரேல் பகுதிகளில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வரும் தமிழக மீனவர்கள், அங்கு நிலவும் போர் சூழ்நிலையில் பாதுகாப்பற்ற நிலையில் சிக்கித் தவிக்கிறார்கள். இவர்களை மீட்டு பாதுகாப்பாக நாடு திரும்பச் செய்ய, மத்திய மற்றும் மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என குடும்பத்தினர், மீனவர் சங்கங்கள் வலியுறுத்தியுள்ளனர்.
தமிழகத்தின் கன்னியாகுமரி மற்றும் நெல்லை மாவட்டங்களைச் சேர்ந்த தூத்தூர், இனயம், முட்டம், உவரி உள்ளிட்ட கடற்கரை கிராமங்களைச் சேர்ந்த பலர், தனியார் ஏஜென்டுகளின் மூலம் ஈரான், இஸ்ரேல் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் ஒப்பந்த அடிப்படையில் ஆழ்கடல் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.
தற்போது ஈரான் மீது அமெரிக்கா மேற்கொண்ட தாக்குதலுடன், அங்கு போர் சூழ்நிலை தீவிரமடைந்துள்ளது. இதனால் ஜீரோ, கிஷ், லாவா தீவு, அசலுயே போன்ற இடங்களில் தங்கி இருக்கும் தமிழக மீனவர்கள் கடும் பதட்டத்தில் உள்ளனர். இதேபோல், இஸ்ரேலில் உள்ள மீனவர்களும் அச்சநிலையில் தங்கியுள்ளனர்.
இதைக் கருத்தில் கொண்டு, வீட்டாரர்கள், மீனவர் சங்கங்கள், மற்றும் விஜய்வசந்த் எம்.பி., சபாநாயகர் அப்பாவு உள்ளிட்ட தலைவர்கள் கீழ்க்கண்டவாறு கோரிக்கை விடுத்துள்ளனர்:
மத்திய வெளியுறவு அமைச்சகம் உடனடியாக ஈரானில் உள்ள இந்திய தூதரகத்தின் மூலம் மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்தமிழ்நாடு அரசு, அங்கு உள்ள தமிழக மீனவர்களின் பட்டியலை தயாரித்து, மத்திய அரசுடன் இணைந்து செயல்பட வேண்டும்
கடந்த காலங்களில் மேற்கொண்டதைப் போன்று, மீனவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றும் நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும்தற்போதைய சூழ்நிலையை நெருக்கமாக கண்காணிக்க வேண்டியதும், அந்நாட்டு அரசுகளுடன் ஒருங்கிணைப்பு ஏற்படுத்த வேண்டியதும் அவசியமாகியுள்ளது இருவறு கோரிக்கை விடுத்துள்ளனர்:.
English Summary
Iran-Israel conflict Families demand the rescue of Tamil Nadu fishermen