வெள்ளை சட்டை அணிந்தால்தானா மரியாதை?" ..ஐகோர்ட் நீதிபதி காவல்துறைக்கு கடும் கண்டனம்! - Seithipunal
Seithipunal


சென்னை உயர் நீதிமன்றத்தில், பொது மக்களின் அத்துமீறல்களுக்கு எதிராக காவல்துறையினருக்கு கடும் கண்டனம் வெளியிடப்பட்டுள்ளது. நீதிபதி வேல்முருகன், “வெள்ளை சட்டை அணிந்தால்தான் மரியாதை தருவீர்களா? அரசு அலுவலகம் எல்லாருக்கும் பொதுவானது” எனக் குறிப்பிட்டார்.

நாங்குநேரியைச் சேர்ந்த வானமாமலை, நொளம்பூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில், நலச்சங்க நிதியில் முறைகேடு மற்றும் சாதி ரீதியான அவமதிப்பு சம்பந்தமான புகாரை காவல் நிலையத்தில் அளிக்கச் சென்றுள்ளார். ஆனால், புகார் ஏற்கப்படவில்லை எனவும், காவல் ஆய்வாளர் அவமானப்படுத்தியதாகவும் கூறி, அவர் தேசிய பட்டியலின ஆணையத்தில் மனு அளித்தார்.

அதன் அடிப்படையில், வானமாமலை சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர, அது நீதிபதி வேல்முருகன் முன் விசாரணைக்கு வந்தது.அப்போது நீதிபதிகடுமையாககேள்வி எழுப்பினார்.. “வெள்ளை சட்டை அணிந்து வந்தால்தான் சிவப்பு கம்பள வரவேற்பா? அழுக்கு சட்டையுடன் வந்தால் புகாரை ஏற்க மாட்டீர்களா? மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் பெற்றுக் கொண்டு, பொதுமக்களை இழிவாக நடத்துவதற்கு உங்களுக்கு உரிமையா? அரசு அலுவலகம் என்பது அனைத்து மக்களுக்கும் உரியது” எனக் கடும் கண்டனம் தெரிவித்தார்.

மேலும், புலனாய்வுத் துறை அதிகாரிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டதா? எனக் கேட்டபோது, காவல் துறை தரப்பில், “இரண்டு வாரங்களில் நடவடிக்கை எடுக்கப்படும்” என பதிலளிக்கப்பட்டது.இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி, வழக்கை ஜூலை 15-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Is wearing a white shirt the only way to show respect? High Court judge severely criticizes the police


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!


செய்திகள்



Seithipunal
--> -->