பெண்களுக்கான இலவச ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் பயிற்சி வகுப்பு.. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்.!
Women's IAS and IPS free coaching last day of apply
தமிழகத்தில் அரசு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் நலனுக்காக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில் தமிழக அரசு மற்றும் கல்லூரி கல்வி இயக்ககம் இணைந்து பெண்களுக்கான ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் இலவச பயிற்சி வகுப்புகளை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது.
இந்த நிலையில் இந்த வருடத்திற்கான பயிற்சி வகுப்புகள் தொடங்க உள்ள நிலையில் இராணி மேரி மற்றும் மதுரை ஸ்ரீ மீனாட்சி கல்லூரிகளின் இணையதளத்தில் விண்ணப்பம் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த இலவச பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயன்பெற விரும்புபவர்கள் www.queenmaryscollege.edu.in மற்றும் www.smgacw.org என்ற இணையதளங்களில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, நவம்பர் 20-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Women's IAS and IPS free coaching last day of apply