சேலம் அருகே சோகம்.! இருசக்கர வாகன மோதி பெண் உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


சேலம் மாவட்டத்தில் இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சேலம் மாவட்டம் காட்டூர் பகுதியை சேர்ந்தவர் ராஜா. இவருடைய மனைவி அம்ஷா(40). இவர் நேற்று இரவு சீலநாயக்கன்பட்டி ரவுண்டானா அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றுள்ளார்.

அப்பொழுது அந்த வழியாக கொண்டலாம்பட்டியில் இருந்து சீலநாயக்கன்பட்டி நோக்கி சென்ற இருசக்கர வாகனம் ஒன்று அம்ஷா மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அம்ஷா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து உள்ளார்.

இதையடுத்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், உயிரிழந்த அம்ஷாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், விபத்தை ஏற்படுத்திய இருசக்கர வாகனம் ஓட்டி வந்த வாலிபரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Women killed in Twowheeler collision in salem


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->