ஒரு தலை காதலை ஏற்க மறுத்த இளம்பெண்.. ரவுடி இளைஞர் வெறிசெயல்..! - Seithipunal
Seithipunal


ஒருதலை காதலியை கொலை செய்த இளைஞரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

புதுச்சேரி மாநிலம், திருபுவனை அருகே சன்னியாசி குப்பம் பேட் பகுதியை சேர்ந்தவர் கீர்த்தனா. இவர் அங்குள்ள கல்லூரி ஒன்றில் பிகாம் படித்து வந்தார். இவரை அதே பகுதியை சேந்த முகேஷ் என்பவர் ஒருதலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால்,  கீர்த்தனா அந்த காதலை மறுத்தாக கூறப்படுகிறது. இந்நிலையில், சம்பவதன்று கல்லூரி சென்று விட்டு திரும்ப வந்த கீர்த்தனாவை வழிமறித்து அவரை காதலிக்க கூறியுள்ளார்.

இதற்கு அவர் மறுக்கவே இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த முகேஷ் தான் வைத்திருந்த கத்தியால் கீர்த்தனாவை சரமாரியாக குத்தி விட்டு அங்கிருந்து தப்பி சென்றார். தலை, கழுத்து பகுதியில் வெட்டுக்காயம் விழுந்தது. ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த கீர்த்தனா சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்தார். தகவலறிந்து விரைந்து வந்த அவரது தம்பி நண்பர்களுடன் அக்காவை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். கீர்த்தனாவின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் உடலை கண்டு கதறி அழுத சம்பவம் காண்போரை கண்கலக்க வைத்தது.

இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முகேஷ் மீது ஏற்கனவே பல வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்தது. ஒருதலைகாதலை ஏற்க மறுத்த இளம்பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Woman Murdered in Pondichery


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->